பசித்த அலைகள்
கரைக்கு வந்து தின்று போகிறது
கால்தடங்களை!
img
நீ என் மாயாவி... 
என் இதயம் குழப்பி... 
ஒரு நொடி அருகில்... 
அடுத்த நொடி தூரமாய்... 


தலையை தடவினாய்... காதலா? 
சோகம் கேட்டாய்... நட்பா?
குடையில் அழைத்தாய்... காதலா? 
குறும்பாய் சிரித்தாய்... நட்பா? 
மாயமோ உன் பார்வை 
மாயமோ உன் அன்பு 
மாயமோ... மாயமோ... மாயமோ...

நீ என் மாயாவி... 
என் இதயம் குழப்பி... 
ஒரு நொடி அருகில்... 
அடுத்த நொடி தூரமாய்... 

கூட்டத்தில் தள்ளினாய்... நட்பா? 
தனிமையில் தேடினாய்... காதலா? 
அழைப்பை மறுத்தாய்... நட்பா? 
இரவில் அழைத்தாய்... காதலா?
மாயமோ உன் பேச்சு 
மாயமோ உன் செயல் 
மாயமோ... மாயமோ... மாயமோ...

நேற்று காத்திருந்தாய்... காதலா? 
இன்று மறந்து போனாய்... நட்பா? 
கையை பிடித்தாய்... காதலா? 
பின்னர் விலகினாய்... நட்பா?
மாயமோ என் காதல் 
மாயமோ உன் மௌனம் 
விடை சொல்வாயா... மாயாவி... விடை சொல்வாயா...

நீ என் மாயாவி... 
என் இதயம் குழப்பி... 
ஒரு நொடி அருகில்..
அடுத்த நொடி தூரமாய்...
இனியும் என்னைப் பார்த்து
கேட்க மாட்டார்கள்
‘நீ என்ன ஆகப்போகிறாய்?’ என்று
எனது கோப்பை நிரம்பிவிட்டது
என்பதை எப்படியோ
தெரிந்து கொண்டுவிட்டார்கள்
விபூதியை நெற்றியில் வைக்காமல்
வீட்டு வாசல்படி தாண்டாதவன்
இன்று கருப்பு சட்டை போட்ட
‘பெரியாரிஸ்ட்’
பாலகுமாரனே கதியென்று இருந்தவன்
இன்று புதுமைப்பித்தன் படிக்கிறான்
‘தண்ணி தெளிச்சி விட்டாச்சு’ 
இனி ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை
போன் செய்து
எங்கே இருக்கிறாய் என்று
கேட்க மாட்டார்கள்
சுபமுகூர்த்த தினங்களில்
மொய் கவரை கையில் திணிப்பதை
இப்போதெல்லாம் ஏனோ
நிறுத்தி விட்டார்கள்
விசேஷங்களுக்கு கூட வந்தால்
அறிமுகப்படுத்த வேண்டியிருக்குமேயென
என்னை எங்கும்
அழைத்துச் செல்வதில்லை
விசில் புரட்சி
நடந்துகொண்டு இருந்தபோதுகூட
எங்கள் வீட்டில்
சீரியல் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
எனக்கு போன் செய்துவிட்டு
‘அம்மா கிட்ட கொடு’ என்று
சொல்லும் அப்பா
உனக்கென்னடா அவசரம் என்று
கையிலிருக்கும் தட்டைப்
பிடுங்கி, வேலைக்குப்போகும்
தம்பியிடம் நீட்டும் அம்மா
தோழிகளோடு வரும்போது மட்டும்
என்னைத் தவிர்த்துவிடும்
எனது தங்கை
தொலைந்துபோன புதுசட்டையை
எனது அறையில் தேடும்
தம்பி
இவ்வளவு இக்கட்டுகளுக்கு
மத்தியில்
‘த்ரிஷா இல்லாட்டி நயன்தாரா’
என விட்டுக் கொடுத்துப் போகும்
நாங்கள்,
வேலையில்லா பட்டதாரிகள்!
img
இப்போதே பகிரவும்