சில நேரங்களில் மழை சிலவற்றை அனுமதிப்பதில்லை காலைவாசலில் விரிந்திருக்கும் வண்ணக் கோலத்தை வடகத்திற்கு காயவைத்திருக்கும் சோற்றுருண்டைகளை கண்ணாடி தூசியில் காதலுடன் வரைந்த இதயச்சின்னங்களை கடற்கரையில் குழந்தைகள் கட்டியெழுப்பிய மணற்கோட்டையை கூரையின்றி நிலத்தில் வாழும் வாழ்வு விதிக்கப்பட்ட ஜீவன்களை இதனுடன், யாராலும் புரிந்துகொள்ளப்படாத உன் கண்ணீரை.

நீ என் மாயாவி... என் இதயம் குழப்பி... ஒரு நொடி அருகில்... அடுத்த நொடி தூரமாய்... தலையை தடவினாய்... காதலா? சோகம் கேட்டாய்... நட்பா? குடையில் அழைத்தாய்... காதலா? குறும்பாய் சிரித்தாய்... நட்பா? மாயமோ உன் பார்வை மாயமோ உன் அன்பு மாயமோ... மாயமோ... மாயமோ... நீ என் மாயாவி... என் இதயம் குழப்பி... ஒரு நொடி அருகில்... அடுத்த நொடி தூரமாய்... கூட்டத்தில் தள்ளினாய்... நட்பா? தனிமையில் தேடினாய்... காதலா? அழைப்பை மறுத்தாய்... நட்பா? இரவில் அழைத்தாய்... காதலா? மாயமோ உன் பேச்சு மாயமோ உன் செயல் மாயமோ... மாயமோ... மாயமோ... நேற்று காத்திருந்தாய்... காதலா? இன்று மறந்து போனாய்... நட்பா? கையை பிடித்தாய்... காதலா? பின்னர் விலகினாய்... நட்பா? மாயமோ என் காதல் மாயமோ உன் மௌனம் விடை சொல்வாயா... மாயாவி... விடை சொல்வாயா... நீ என் மாயாவி... என் இதயம் குழப்பி... ஒரு நொடி அருகில்.. அடுத்த நொடி தூரமாய்...
ஐன்ஸ்டீன் எழுத மறந்த அறிவியல் தத்துவம் கருந்துளையை காட்டிலும் அவளின் கருவிழியில் ஈர்ப்பு அதிகம் என்பது.....!!!!
