மனிதர்களை இழப்பதென்பது 
பெரிதும் என்னை 
அலுப்படைய செய்வதில்லை 
அதிலெனக்கு முக்கால் அனுபவம் 
ஆனால் 
அதன் ஆயத்தங்களில்தான் 
பெரும்பயிற்சி வேண்டுகிறேன் 
இழப்பை விடவும்
இழப்பின் பயம் கொடிது...
நீ என் மாயாவி... 
என் இதயம் குழப்பி... 
ஒரு நொடி அருகில்... 
அடுத்த நொடி தூரமாய்... 


தலையை தடவினாய்... காதலா? 
சோகம் கேட்டாய்... நட்பா?
குடையில் அழைத்தாய்... காதலா? 
குறும்பாய் சிரித்தாய்... நட்பா? 
மாயமோ உன் பார்வை 
மாயமோ உன் அன்பு 
மாயமோ... மாயமோ... மாயமோ...

நீ என் மாயாவி... 
என் இதயம் குழப்பி... 
ஒரு நொடி அருகில்... 
அடுத்த நொடி தூரமாய்... 

கூட்டத்தில் தள்ளினாய்... நட்பா? 
தனிமையில் தேடினாய்... காதலா? 
அழைப்பை மறுத்தாய்... நட்பா? 
இரவில் அழைத்தாய்... காதலா?
மாயமோ உன் பேச்சு 
மாயமோ உன் செயல் 
மாயமோ... மாயமோ... மாயமோ...

நேற்று காத்திருந்தாய்... காதலா? 
இன்று மறந்து போனாய்... நட்பா? 
கையை பிடித்தாய்... காதலா? 
பின்னர் விலகினாய்... நட்பா?
மாயமோ என் காதல் 
மாயமோ உன் மௌனம் 
விடை சொல்வாயா... மாயாவி... விடை சொல்வாயா...

நீ என் மாயாவி... 
என் இதயம் குழப்பி... 
ஒரு நொடி அருகில்..
அடுத்த நொடி தூரமாய்...
அம்மா அருகில் இருந்தது தான் என் சொர்க்கம்,

அவள் இதய துடிப்பே என் தாலாட்டு இசை.

சிறு கண்கள் திறந்ததும் தேடிய முகம் அவள்,

சிறு பயம் வந்ததும் ஒளிந்த இடம் அவள்.

ஒரு நாள் வந்த கைகள் என்னை பிரித்துச் சென்றது,

அம்மா குரைத்த சத்தம் நெஞ்சை கிழித்தது.

பின்னால் பார்த்தேன்... அவள் ஓடி வந்தாள்,

ஆனால் தூரம் மட்டும் எங்களை வென்றது.

அம்மா வாசம் இல்லா இந்த புதிய உலகில், ஒரு குட்டி இதயம் மட்டும் இன்னும் அவளை தேடுகிறது...
img
இப்போதே பகிரவும்